Pages

Saturday, March 19, 2011

உண்மையை சொல்லுங்கள்...!!!! - காதல் கவிதை

உண்மையை சொல்லுங்கள்...!!!!

ஜாதி
மதம்
மொழி
அந்தஸ்து
வேலை
அழகு
காமம்
பணம்
குடும்ப பின்னணி
இவை எல்லாவற்றிற்கும்
அப்பாற்பட்டதுதான் காதல்
என்கிறான் நண்பன்....

பிறகு,
காதலில்
என்னதான் இருக்கிறது...???

அளவு கடந்த அன்புதான் காதல்
என மீண்டும் வாதிடுகிறான்....

அதற்க்கு
ஒரு பூனைக்குட்டியோ
நாய்க்குட்டியோ
போதாதா
நண்பர்களே,தோழிகளே...???
உண்மையை சொல்லுங்கள்...

No comments:

Post a Comment