Pages

Wednesday, March 16, 2011

இதயம் நனைத்த முரளி...!!!

இதயம் நனைத்த முரளி...!!!

 

பூவிலங்கில் முகம் பதித்தாய்
பகல் நிலவில் நட்சத்திரமானாய்
இப்படியாய் எங்களை மெல்லமெல்ல
உன் வசம் இழுத்தாய்.....!!!

பெண்களிடம் காதலை தவிர்த்து
கறைபடாத நட்புடன்
கடைசி வரை வாழலாமென
புது வசந்தத்தில்
நட்ப்பிற்கே கற்பு அளித்தாய்...!!!

இதயத்தின் மூலம்
இளசுகளின் இதயத்தில்
மீண்டும் வெளியேறா வாசலை
அடைத்துவிட்டு உள்ளே நுழைந்தாய்...!!!

''இந்த பாதங்கள்
மண் மீது நடப்பதற்க்கல்ல
மலர்கள் மீது ''
என்று
நீ வாசித்து நடித்ததாகட்டும்
இதயமே இதயமே..... என
நீ உருகி பாடி நடித்த பாடலாகட்டும்
அதற்க்கு ஈடாகுமா
இங்கு எங்களின் கிறுக்கல்கள்...!!!

ஆனந்தம் ,பொற்காலம் தொடர்ந்து
'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு"
என உனக்கான பாடலில்
எங்களை போன்ற கருப்பான
காளைகளை காலரை தூக்கிவிட்டு
நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைத்த
பெருமை என்றுமே உனக்கல்லவா.....!!!

பாணா காத்தாடியில்
உன் மகனுக்கே ஒரு நண்பனாய்
காதலை பற்றி அறிவுரை கூறிவிட்டு
நான் மருத்துவுக்கல்லூரியின்
இறுதியாண்டு மாணவன் என
உன்னை அறிமுகபடுத்தி போகும் காட்சியில்
உனக்கான கைதட்டல்களை
அள்ளிசென்றாய்.....!!!

ஆனால்..,
இதுதான் உனக்கான
கடைசி கைதட்டல்கள் என்பதை அறியாமல்
அதில் பங்குகொள்ளாமல்
ஒரு மௌன புன்னகையோடு
இருந்துவிட்டு நான் இழந்த அந்த
நிமிடங்களை நினைத்து வருந்துகிறேன்
விழியோரமாய் நீருடன்....!!!

உன் ஆன்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும் ஒரு ரசிகன்
உன் சினிமா குடும்பத்தின்
ஒரு ஊழியன்.....!!!

No comments:

Post a Comment